பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த 13-ந்தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு அ.தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்வில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், செந்தில் பாலாஜி மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவர் தற்சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதால் மக்கள் வரிப்பணம் வீணாகும். செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால் நீதிமன்ற காவலில் இருக்கும் போது ரகசிய கோப்புகளை அணுக இயலும். இலாகா மாற்றத்திற்கு பிறகு செந்தில் பாலாஜியை அமைச்சராக ஆளுநர் அங்கீகரிக்கவில்லை என கூறினார்.
