திருப்பூர் :
விலை குறைவால் உடுமலை பகுதியில் சாலையோரம் தக்காளி வீசப்படுகிறது. தக்காளி சாகுபடி உடுமலை பகுதியில் ஆண்டு முழுவதும் பல்வேறு பட்டங்களில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலவிய கடும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை, காலநிலை மாற்றம் காரணமாக தக்காளி சாகுபடி பரப்பளவு குறைந்ததோடு, உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தக்காளியின் விலை விண்ணை எட்டும் அளவுக்கு உயர்ந்து கிலோ ரூ.180-க்கும் மேலாக விற்பனையானது. அதைத் தொடர்ந்து ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடிக்கு திரும்பினார்கள். அதன் பயனாக உற்பத்தியும் அதிகரித்தது. இதனால் அதன் விலையும் படிப்படியாக குறைந்து தற்போது ரூ.15 வரையிலும் விற்பனை ஆகிறது. விற்பனை மந்தமடைந்து உள்ளதால் பழுத்த தக்காளியை சரியான இடைவெளியில் பறிக்க முடியாத நிலையில் உள்ளது. இதனால் சில விவசாயிகள் சாலையின் தக்காளியை கொட்டி செல்கிறார்கள..
இதனால் தக்காளியில் உலர்பவுடர், சாஸ், ஜாம், தொக்கு, ஊறுகாய், ஜூஸ் என பல்வேறு பொருட்கள் தயாரித்து அதன் மூலம் இழப்பை சரி செய்ய முடியும். அதுமட்டுமின்றி குளிர் பதன கிடங்கு அமைத்து தக்காளியை பாதுகாத்து பயன்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும். இதனால் திடீர் விலை உயர்வால் பொதுமக்களும் பாதிப்பு அடைய மாட்டார்கள். விவசாயிகளின் வாழ்வாதாரமும் காப்பாற்றப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.