1.கடவுள் வாழ்த்து
கடவுளை வாழ்த்துதல்.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
பிறக்கும்பொழுதே தொடர்ந்து வருகின்ற பிறவிவினை. பிறந்து வாழும்பொழுது செய்யப்படும் தீவினையாகிய தன்வினை ஆகிய இரண்டும் இருளில் சேர்க்கும் இரண்டு வினைகளும் இறைவனின் மெய்யான புகழைப்புரிந்துகொண்டுபோற்றுபவரிடம் சேர்வது இல்லை. (முன் இணைப்பில் காண்க)