நெல்லை பேட்டை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பிச்சைராஜ்(50). அதிமுக பிரமுகர். இவர் பேட்டை ரூரல் பஞ்சாயத்தின் முன்னாள் துணைத் தலைவராக இருந்துள்ளார். நெல்லையில் அதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை பேட்டை எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பிச்சைராஜ்(50). அதிமுக பிரமுகர். இவர் பேட்டை ரூரல் பஞ்சாயத்தின் முன்னாள் துணைத் தலைவராக இருந்துள்ளார். இவர் பேட்டை எம்ஜிஆர் நகர் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடையில் பார் நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்றிரவு வழக்கமான பணிகளை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் பிச்சைராஜை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த பிச்சைராஜ் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு