அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டர் புரோட்டான் பீம் தெரபி சிகிச்சைக்காக சர்வதேச மருத்துவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது
சென்னை, மார்ச் 21, 2024: தெற்காசியா மற்றும் மததிய கிழக்கு பிராந்தியத்தில் தெரபி சென்டரான அப்பல்லோ புரோட்டான் கேன்சர சென்டர் (APCC) உலகளாவிய அளவில் சுகாதாரப் பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்த தயாராக உள்ளது புரோட்டான் தெரபி சிகிச்சையில் உலகளாவிய அளவில் முன்னணி நிறுவனமான பெலஜியத்தை தளமாகக் கொண்ட IBA உடன் இணைந்து APC PST பற்றிய அதன் தொடர் பயிற்சித் திட்டங்களில் இந்தோனேஷியா மற்றும் வியட்நாமில் இருந்து தனது முதல் பேட்ச் சிறந்த மருத்துவர்களுக்கு சமீபத்தில்பயிற்சி அளித்துள்ளது இந்த முன்முயற்சியின் மூலம் சர்வதேச புற்றுநோயியல் நிபுணர்களுக்கான சிறப்பு புரோட்டான் பீம் தெரபி சிகிச்சை பயிற்சி திட்டத்தை நடத்தும் தென்கிழக்கு ஆசியாவில் இந்தியா முதல் நாடாகும். முதல் மற்றும் மிகப்பெரிய புரோட்டான்
PBT இல் பயிற்சித் திட்டத்தைத் தொடங்கும் முதல் இந்திய கேன்சர் சென்டரான, இது கூட்டு புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது மேலும் அறிவைப் பகிர்வதிலும் உலகளாவிய புற்றுநோய் சிகிச்சையை முன்னேற்றுவதிலும் முன்னணியில் இருக்கும் அதன் நிலையை உறுதிப்படுத்துகிறது கஜகஸ்தான், மலேசியா, ஸ்லோவேனியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புற்றுநோயியல் நிபுணர்களுக்கு இதேபோன்ற பயிற்சித் திட்டங்கள் வரிசையில் உள்ளன.
புரோட்டான் பீம் தெரபி பல்வேறு புற்றுநோய்களுக்கு மிகவும் துல்லியமான மற்றும் பயனுள்ள கதிர்வீச்சு சிகிச்சையாக உருவெடுத்துள்ளது புற்றுநோய் கட்டிகளை சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு சேதத்தை குறைக்கும் அதே வேளையில் இலக்கு கட்டி சிகிச்சையை வழங்குகிறது APCC இதுவரை, 10 மாத ஆண் குழந்தை உள்பட 1400 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது. மேலும் புற்றுநோயை எதிர்த்து போராடியவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி குறிப்பிடத்தக்க மருத்துவ சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிகழ்ச்சியின் விருந்தினராகக் தலைமை கலந்து கொண்ட இந்தியாவுக்கான பெல்ஜியத்தின் தூதர் ஹெச்ஈ திரு டிடியர் வாண்டர்ஹாசெல்ட் பேசுகையில் பெல்ஜியத்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயான இராஜதந்திர உறவுகளின் வரலாற்று தொடக்கத்திலிருந்து இன்று வரை, சுகாதாரப் பாதுகாப்பில் முன்னோடியாக இருக்கும் முன்னேற்றங்கள் எங்களின் நீடித்த ஒத்துழைப்புக்கு சான்றாக உள்ளன. புற்றுநோய் சிகிச்சையில் புதுமை மற்றும் சிறந்து விளங்கும் முயற்சிகளை ஆதரிப்பதில் பெல்ஜியம் பெருமிதம் கொள்கிறது.

இந்த நிகழ்வைசு குறிக்கும் ஒரு சக்திவாய்ந்த அறிக்கையில், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் நிர்வாக துணைத் தலைவர் டாக்டர் ப்ரீத்தா ரெட்டி IBA உடனான தங்கள் ஒத்துழைப்பின் மாற்றத்தக்க தாக்கத்தை வலியுறுத்தினார். இந்தக் கூட்டணி உலகளாவிய சுகாதாரக் கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கான எங்களின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும் நமது பலம் மற்றும் நிபுணத்துவத்தை ஒன்றிணைப்பதன் மூலம் உலகளவில் புற்றுநோயை எதிர்கொள்வதற்கான எங்கள் கூட்டுத் திறனை கணிசமாக மேம்படுத்துகிறோம் இந்த பயிற்சிக் திட்டம் எல்லைகளில் தடையின்றி அறிவுப் பரிமாற்றத்தை எளிதாக்கும் எங்கள் கூட்டாண்மையில் ஒரு முக்கிய நிகழ்வாகும் புரோட்டான் பீம் தெரபி பற்றிய அதிநவீன நுண்ணறிவுகளுடன் இது உலகளவில் புற்றுநோயியல் நிபுணர்களை தயார்படுத்துகிறது. இந்த ஒத்துழைப்பு உலகளவில் புதுமையான சிகிச்சைகளுக்கான ஜனநாயகமயமாக்குவதற்கான எங்களின் ஒருங்கிணைந்த பார்வையின் தெளிவான வெளிப்பாடாகும். மேலும் மேம்பட்ட தீர்வுகள் அனைவருக்கும் எட்டக்கூடிய சுகாதாரத்தில் ஒரு புதிய சகாப்தத்தை அறிவிக்கிறது.
வியட்நாமில் உள்ள சோ ரே மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் நுயென் தி மின் ஹியூ கூறுகையில் ப்பல்லோ புரோட்டான் கேன்சர் சென்டரில் சிறப்புப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்பது புரோட்டான் பீம் தெரபி சிகிச்சையில் நமது திறன்களையும் அறிவையும் மேம்படுத்துவதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பாகும் பெறுவதற்கு நாங்கள் எதிர்நோக்குகிறோம். இந்த பயிற்சித் திட்டத்தின் போது மதிப்புமிக்க திறன்கள் மற்றும் அறிவைப் பெறுவதற்கு நாங்கள் எதிர் நோக்குகிறோம் இது எங்கள் நோயாளிகளுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்கும் வியட்நாமில் புற்றுநோய் சிகிச்சையின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும் உதவும்.
இந்தோனேசியாவின் தர்மிஸ் நேஷனல் கேன்சர் சென்டரின் ஹெச்ஓடியும் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணருமான டாக்டர் ஃபெப்ரியோனோ பாசுகி ரஹார்ஜோ கூறுகையில் APCC இல் புரோட்டான் பீம் தெரபி பயிற்சிக்கான முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதால், இது இந்தோனேசிய புற்றுநோயியல் நிபுணர்களுக்கு கேம் சேஞ்சராக உள்ளது புற்றுநோய் சிகிச்சையில் உலகத் தரம் வாய்ந்த நிபுணத்துவத்தின் கலங்கரை விளக்கமாக இந்தியா நிற்கிறது மேலும் இந்த சென்டர் சிறந்து விளங்குவதற்கான இந்த அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது இந்த பயிற்சியின் மூலம் இந்தோனேசியாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள அதிகமான நோயாளிகளுக்கு PBT இன் நன்மைகளை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் இறுதியில் எங்கள் பிராநதியத்தில் புற்றுநோய் சிகிச்சைகளை மேம்படுத்துகிறோம்.
APCC இல் உள்ள பயிற்சித் திட்டம் புற்றுநோய் சிகிச்சையில் மேலும் புதுமைகளை உருவாக்க பல்வேறு பின்னணியில் உள்ள புற்றுநோயியல் நிபுணர்களின் திறன்கள் மற்றும் அறிவை மேம்படுத்துவதற்கும். ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் அறிவுப் பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்கும் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம் APCC மற்றும் BA ஆகியவை பிராந்தியம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு சிறந்த புற்றுநோய் சிகிச்சையை வழங்க தேவையான நிபுணத்துவத்துடன் மருத்துவர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
APCC இல் PBT பயிற்ச்சியின் நன்மைகள் :
- 1400 நோயாளிகள் வெற்றிகரமாக சிகிச்சை பெற்றுள்ளனர்.
- 147 நாடுகளைச் சேர்ந்த நோயாளிகள் அப்பல்லோ மருத்துவமனைகளை அணுகுகின்றனர்.
- பயிற்சி- ஆறு கண்டங்களில் இருந்து PBT நிபுணர்களைக் கொண்ட ஒரு தீவிர மருத்துவ மற்றும் கல்வி.
- நிகழ்வு • கட்டி பற்றி 350 க்கும் மேற்பட்ட மற்றும் மெய்நிகர் விவாதங்கள் தேசிய சரவதேச குழு.
- அனைத்து முறைகளுக்கும் உறுப்பு அடிப்படையிலான நடைமுறையை வெற்றிகரமாக செயல்படுத்துதல்.
- கனெக்ட் மற்றும் மேம்பட்ட சிக்கலான புற்றுநோய்களைப் பற்றி சர்வதேச விவாதிக்க புற்றுநோயியல் நிபுணர்களுடன் எங்கள் மருத்துவ நெட்வொர்க்கிற்கான ஒரு தளம்.