இந்திய கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் : டெல்லியில் இன்று…

இன்று டில்லியில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கு கொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று பிரமாண்டப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.  இந்தக் கூட்டத்தைக்  காங்கிரஸ் மற்றும் ஆத்மி கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் குறிப்பாகக் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி  டெரிக் ஓ பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ்), திருச்சி சிவா (தி.மு.க.), பரூக் அப்துல்லா (தேசிய மாநாடு), மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயகக் கட்சி), ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று செய்தியாளர்களிடம்,

“டில்லியில் நடைபெறும் பொதுக்கூட்டம் எந்த ஒரு குறிப்பிட்ட நபருக்கானது அல்ல  அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கானது. அதனால்தான் இதை ஜனநாயகத்தைக் காப்பாற்றும் பொதுக்கூட்டம் என அழைக்கிறோம். இந்த பொதுக்கூட்டம் எந்த ஒரு கட்சியின் கூட்டமும் அல்ல. சுமார் 28 கட்சிகள் இதில் ஈடுபடுகின்றன. இந்தியா கூட்டணியின் அனைத்து கட்சிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றன. இந்தியா கூட்டணியின் ஒற்றுமையையும், ஆதரவையும் பற்றிய வலுவான செய்தியை இந்த கூட்டம் ராம்லீலா மைதானத்தில் இருந்து லோக் கல்யாண் மார்க்குக்கு (பிரதமர் இல்லம்) அறிவிக்கும். விலைவாசி உயர்வு, 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்ட விகிதம் உயர்வு, பொருளாதாரப் பாகுபாடுகள், சமூக பிளவுகள், விவசாயிகளுக்கான அநீதி போன்றவை இந்த கூட்டத்தில் எழுப்பப்படும். எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து மத்திய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவது மற்றொரு பிரச்சினையாக முன்வைக்கப்படும். எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாகக் குறிவைக்கும் முயற்சியில் 2 முதல்-மந்திரிகள் மற்றும் பல மந்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது, எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் முடக்குவதற்குப் பிரதமர் விரும்புவதை காட்டுகிறது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்தல் மற்றும் காங்கிரசை வரி பயங்கரவாதத்தால் குறிவைப்பது போன்ற பிரச்சினைகளும் பொதுக்கூட்டத்தில் எழுப்பப்படும். எங்களுக்கு மேலும் 2 வருமான வரித்துறை நோட்டீசுகள் வந்துள்ளன. இந்த பொதுக்கூட்டத்தின் மிக முக்கியமான நோக்கம் அரசியலமைப்பைப் பாதுகாப்பதாகும். பா.ஜனதா தலைவர்கள் அதை மாற்றி எழுத விரும்புவதால், அது ஆபத்தில் இருக்கிறது” என்று கூறினார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

இந்திய கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் : டெல்லியில் இன்று…

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய