வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை, முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் திரும்ப பெற்றுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரூ.82.32 கோடி வரி செலுத்தக் கோரி வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. இதனை ரத்து செய்யக் கோரியும், மேல் நடவடிக்கைக்கு தடை கோரியும்ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் ஆஜரான ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், நோட்டீசை எதிர்த்து வருமான வரித்துறையில் மேல்முறையீடு செய்துள்ளதால் மனுவை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என முறையிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவை திரும்ப பெற அனுமதித்து உத்தரவிட்டார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு