ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை:

*ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது*திண்டுக்கல் அருகே, ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண். இவர், தூத்துக்குடியில் உள்ள தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் தங்கியிருந்து படித்து வருகிறார். இந்த நிலையில் தூத்துக்குடியில் இருந்து ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில், என்ஜினுக்கு அருகில் உள்ள முன்பதிவில்லாத பெட்டியில் அந்த மாணவி ஏறி ஈரோட்டுக்கு சென்றுகொண்டிருந்தார்.ரயில் விருதுநகர் ரயில் நிலையத்தை அடைந்ததும் வாலிபர் ஒருவர், மாணவி பயணம் செய்த பெட்டியில் ஏறினார். அம்பாத்துரை அருகே ரயில் வந்த போது, அந்த வாலிபர் மாணவியை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதைப்பார்த்த சக பயணிகள், ரயில் நிலைய அவசரகட்டுப்பாட்டு எண் 139-ல் தொடர்புகொண்டு இதுகுறித்து புகார் கொடுத்தனர்.இதையடுத்து ரயில் திண்டுக்கல் வந்தபோது மாணவி பயணம் செய்த முன்பதிவில்லாத பெட்டிக்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.விசாரணையில், அந்த வாலிபர் விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையை சேர்ந்த சதீஷ்குமார் (33) என்பதும், கோவையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்ப்பதும் தெரியவந்தது. கோவைக்கு செல்வதற்காக ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த போது, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.முன்னதாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடும் ரயிலில் பெண்கள் பெட்டியில் பயணித்த, கர்ப்பிணி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து அனைத்து ரயில்களிலும் பெண்கள் பெட்டியில் ரயில்வே போலீசார் சோதனை நடத்தும்படி உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், மாணவிக்கு வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை:

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய