கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அடுத்த மேலப்பெருவிளை புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பாவிகளுக்கு அடைக்கலமான புனித சலேத் அன்னை கெவி உள்ளது. இந்தக் கெவியில் வருடம் தோறும் வருடாந்திர திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த திருவிழ வானது கடந்த மாதம் ஜனவரி 31-ஆம் தேதி வெள்ளிகிழமை தொடங்கி 31, 1, 2 ஆகிய3 – நாள்கள் நடைபெற்றது.1, 2, ஆம் தேதிகளில் இரண்டு நாட்கள் அன்னையின் சொரூபம் தாங்கிய தேர் பவனி நடைபெற்றது. மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆடம்பர கூட்டு திருப்பலியுடன் தேர் பவனி நடை பெற்றது. அதனை தொடர்ந்து கஞ்ஜி விருந்தும் நடைபெற்றது.மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அன்னையின் ஆசி பெற்று சென்றனர்.மேலும் இந்த சலேத் தன்னை கெவியில் ஒவ்வொரு மாதமும் 19-ஆம் தேதி சிறப்பு ஜெப வழிபாடு, ஆடம்பர கூட்டுத் திருப்பலி,நற்கருணை ஆசீர்வாதமும் அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்பின் உணவு விருந்தும் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனன் என்பது குறிப்பிடத்தக்கது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு