கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் மக்களுக்கு சலுகைகள்: கலெக்டர் அசத்தல்

கரூர்:
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்கள் அளிக்க வரும் பொது மக்களுக்கு வெயில் தாக்கத்தினை குறைத்திடும் அளவிற்கு பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் மேற்கொண்டார்கள்.
அந்த வகையில் திங்கள் கிழமை தோறும் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை புரியும் பொதுமக்களுக்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது.
மனுக்களை அளிக்க வரும் பொது மக்களுக்கு மகளிர் சுய உதவி குழுக்களை கொண்டு இலவசமாக கோரிக்கை மனுக்களை எழுதிக் கொடுக்கவும், கோரிக்கை மனுக்கள் எழுதும் இடத்தில் அனைவருக்கும் நீர் மோர் வழங்கவும், வரிசையில் நின்று மனு கொடுப்பவர்கள் வெயிலில் நிற்காத அளவிற்கு மேற்கூரைகள் அமைத்தும், அப்பகுதியில் சின்டெக்ஸ் டேங்க் மூலம் குடிநீர் மற்றும் மண் பானைகள் மூலம் குடிநீர் வைக்கப்பட்டு உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் சிரமம் ஏதுமின்றி தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து மகிழ்ச்சியுடன் சென்றார்கள்.
அதேபோல் மாற்றுத்திறனாளிகளை காலதாமதம் படுத்தாமல் அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதே இடத்தில் உடனுக்குடன் கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு, பிற மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் மொத்தம் 643 கோரிக்கை மனுக்கள் வரப் பெற்றுள்ளன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 84 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றுள்ளன.
பின்னர் மாற்றுதிறனாளிகள் நலத்துறைத்துறை சார்பில் 1 பயனாளிகளுக்கு காதொலி கரூவிகளும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.540 மதிப்பீட்டில் ரூ.1080 மதிப்பிலான ஊன்றுகோலும், 1 பயனாளிக்கு ரூ.7900 மதிப்பிலான சக்கர நாற்காலியும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை 1 பயனாளிக்கு ஆதரவற்ற விதவைச்சான்றும், விதவை தொகைக்கான ஆணைகளையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பாக 20 பயனாளிகளுக்கு தலா ரூ.6000 மதிப்பீட்டில் ரூ.1,20,000 மதிப்பலான தையல் இயந்திரமும், ஆக மொத்தம் 26 பயனாளிகளுக்கு ரூ.159979 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை வாணிஈஸ்வரி, கூட்டுறவு துறை மண்டல இணைபதிவாளர் கந்தராசா, தனித்துணை ஆட்சியர்(சபாதி) சைபுதீன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கும் மக்களுக்கு சலுகைகள்: கலெக்டர் அசத்தல்

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய