தனது காதலை ஏற்காததால் ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்காகவும் வியாபாரத்தில் ஏற்பட்ட பாதிப்பிற்காகவும் 24 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தோழி மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார் . தோழி மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார் இளைஞர் . சிங்கப்பூரில் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் காவ்ஷிகன் -நோரா. கடந்த 2016 ஆம் ஆண்டில் இவர்கள் சந்தித்து இருக்கிறார்கள். அதன் பின்னர் நண்பர்களாக பழகி வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நோரா மீது காவ்ஷிகனுக்கு காதல் வந்திருக்கிறது. 2020 ஆம் ஆண்டில் தன் காதலை நோராவிடம் சொல்லி இருக்கிறார் காவ்ஷிகன். ஆனால் தனக்கு காதல் இல்லை நட்பாக மட்டுமே பழகலாம் என்று சொல்லி இருக்கிறார் நோரா.
ஆனாலும் நண்பர்களாக தொடர்ந்து பழக முடியாமல் தவித்திருக்கிறார் காவ்ஷிகன். காதலியாக மட்டுமே அவரை நோராவை அவரால் பார்க்க முடிந்திருக்கிறது. இதனால் கடந்து 2020 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. நண்பனாக மட்டுமே பார்க்க முடியும் என்று நோரா உறுதியாக சொல்லிவிட்டதால் உணர்வு ரீதியாக தன்னை கொடுமைப்படுத்துகிறார் என்று நோரா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவெடுத்து இருக்கிறார் காவ்ஷிகா.
இதனால் அவரை சமாதானப்படுத்தி மருத்துவரிடம் கவுன்சிலிங் செல்லலாம் என்று அழைத்துச் சென்று இருக்கிறார். இதனால் சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கையை எடுக்காமல் இருந்திருக்கிறார் காவ்ஷிகன். இருவரும் தொடர்ந்து மருத்துவரிடம் கவுன்சிலிங் சென்று இருக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு மேலாகியும் கூட கௌசிகன் மனநிலை மாறாமல் இருந்திருக்கிறது. இதனால் வேறு வழி இல்லாமல் அவரை விட்டு விலகி இருக்கிறார்.
இதில் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் காவ்ஷிகன். அதனால் தொழிலில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. தனக்கு மன அழுத்தம் தந்ததற்காகவும் அதனால் தொழிலில் பாதிப்பை ஏற்படுத்தியதற்காகவும் தோழி நோராவிடம் நஷ்ட ஈடு கேட்க முடிவு எடுத்திருக்கிறார். 24 லட்சம் ரூபாய் தனக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று நோரா மீது காதல் வழக்கு தொடர்ந்து இருக்கிறார் தோழன். தொடர்ந்த இந்த வழக்கு வரும் ஒன்பதாம் தேதி அன்று விசாரணைக்கு வர இருக்கிறது.