டோக்கியோ:
அடிக்கடி நில நடுக்கம் ஏற்படும் குட்டி நாடான ஜப்பானில் புதிதாக 7 ஆயிரம் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் மிகவும் வித்தியாசமான நாடு ஜப்பான். அங்கு சுனாமி, நில நடுக்கம் சர்வ சாதாரணமாக ஏற்படும். அதிகப்படியான எரிமலை வெடிப்புகளும் என இயற்கை சீற்றங்களுக்கு பஞ்சமே இருக்காது. ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வெடிப்பு பேரழிவுகளின் தாக்கம் மறுபுறம் என வாழ்நாள் முழுவதும் சவால்களை சந்தித்துவரும் ஜப்பானியர்கள் உழைப்பால் உயர்ந்திருக்கிறார்கள்.
சமவெளிகள், மலை முகடுகள். நீர் பரப்பு என அனைத்தையும் சரிவர பெறப்பட்ட நாடுகளை விட இயற்கை பேரிடர்களை அதிகம் சந்திக்கும் ஜப்பான் போன்ற குட்டி நாடுகளுக்கு. மனித குலம் வாழத்தேவையான நிலப்பரப்பு என்பது இன்றியமையாதது.
இந்த பின்னணியில் ஜப்பானியர்களுக்கு தித்திக்கும் செய்தியாக வந்துள்ளது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 7 ஆயிரம் தீவுகள். கடந்த 1987 ஆம் ஆண்டு ஜப்பான் கடலோரக் காவல் படையின் கணக்கெடுப்பின்படி அந்நாட்டில் அதிகாரப்பூர்வ பயன்பாட்டில் இருந்த தீவுகளின் எண்ணிக்கை 6852. அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 97 சதவீதம் 4 பெரிய தீவுகளால் ஆனது. ஜப்பானியர்கள் தீவுகளை தங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக திட்டமிட்டு பயன்படுத்துகின்றனர்.‘
விமான நிலையங்கள் சமவெளிகளில் இருப்பதைத்தான் பார்த்திருப்போம். ஆனால் ஜப்பானில் கன்சாய் மாகாணத்தில் ஒசாகா கடல்பகுதியில் உள்ள ஒரு தீவில் ஜப்பானியர்கள் பன்னாட்டு விமானநிலையத்தையே கட்டமைத்துள்ளனர். 1994 ஆம் ஆண்டு முதல் இந்த பன்னாட்டு விமான நிலையம் செயல்பாட்டில் உள்ளது. தீவுகளை வர்த்தக ரீதியாக வளர்த்தெடுக்க கடலுக்கு அடியில் தீவுகளை இணைக்கும் பாலம், கடலுக்கு அடியில் டியூப் ரயில், தொழிற்சாலைகள். வானுயர்ந்த கட்டங்கள் என சாதனை படைத்து வருகின்றனர்.
ஜப்பானியர்களின் வாழ்வில் தீவுகள் இத்தனை முக்கியத்துவம் பெற்றிருக்கும் நிலையில் அந்நாட்டின் ஜி.எஸ்.ஐ. எனும் அமைப்பு மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி புதிதாக 7 ஆயிரம் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கிறது ஜப்பான் அரசு. தீவுகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த திட்டம் போட தொடங்கிவிட்டது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு