சபரிமலையில் நாளை மகர ஜோதி.. பொன்னம்பல மேட்டில் களைகட்டும் ஏற்பாடுகள்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மகர ஜோதி தரிசனத்தையொட்டி,  பொன்னம்பல மேட்டில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில்,  மகர விளக்கு திருவிழா நடைபெற்று வருகிறது.  முன்னதாக கார்த்திகை மாதத்தில் மண்டல பூஜை நடைபெற்ற நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டது.  பின்னர் மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக  டிசம்பர் 31ம் தேதி நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மகர விளக்கு திருவிழாவின்போது ஐயப்பன் சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அந்தவகையில் இந்த ஆண்டு  மகர ஜோதி நிகழ்வானது  நாளை மாலை நடக்க இருக்கிறது. அப்போது ஐயப்பன் சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவாய் காட்சி அளிப்பார்.

அப்போது பக்தர்கள் விண்ணை பிளக்கும் அளவிற்கு, சரண கோஷம் எழுப்புவர். மகர ஜோதியை ஒட்டி கடந்த 2  நாட்களாகவே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இருமுடிக்கட்டி கோவிலுக்கு வரும் பக்தர்கள்  மகர ஜோதியை தரிசிக்க காட்டுப்பகுதியில் முகாமிட்டு தங்கி உள்ளனர். நாளை ஜோதி தரிசனம் முடிந்த பின்னரே அவர்கள் மலை இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.   இதனால் சன்னிதானத்திலும், காட்டு பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் கட்டுகடங்காமல் உள்ளது. ஏற்கனவே சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் தங்கி உள்ளதால், நாளை சபரிமலை செல்லும் பக்தர்களுக்கென  பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  அந்தவகையில் சபரிமலை செல்லும் பக்தர்கள் நாளை பகல் நேரத்தில்  சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மகரஜோதியை ஒட்டி,  சன்னிதானம் மற்றும் பொன்னம்பலமேடு பகுதிகளில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இதற்கிடையே மகர ஜோதி தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் , சன்னிதானத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்படும். அந்த ஆபரணங்கள் எடுத்து வரப்படும்  பெட்டிக்கு பக்தர்கள் பல இடங்களில் வரவேற்பு அளித்தனர். மகர ஜோதியன்று ஐயப்பன் பொன்னம்பல மேட்டில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அதேநேரம், சன்னிதானத்தில் ஐயப்பன் திருவாபரணம் அணிந்து காட்சி தருவார்.  இந்த இரு நிகழ்வுகளையும் காண  பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

சபரிமலையில் நாளை மகர ஜோதி.. பொன்னம்பல மேட்டில் களைகட்டும் ஏற்பாடுகள்..

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய