சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அவர்கள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்த்தாய் விருது -தென்காசித் திருவள்ளுவர் கழகம், கபிலர் விருது – கவிஞர் முத்தரசன், உ.வே.சா விருது – முனைவர் ஆ. இராமநாதன், கம்பர் விருது – முனைவர் ம.பெ. சீனிவாசன், சொல்லின் செல்வர் விருது – முனைவர் இ.சா. பர்வீன் சுல்தானா, உமறுப்புலவர் விருது – திரு. தா. சையது காதர் ஹீசைன், ஜி.யு. போப் விருது – முனைவர் வெ. வ. முருகன், இளங்கோவடிகள் விருது 1. முருகன், இள முனைவர் சிலம்பு நா. செல்வராக, அம்மா இலக்கிய விருது – முனைவர் சரளா இராசகோபாலன், சிங்காரவேலர் விருது – மு. -சுப்பிரமணி, அயோத்திதாசப் பண்டிதர் விருது முனைவர் மு. சச்சிதானந்தம், மறைமலையடிகளார் விருது -புலவர் இராமலிங்கம், அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது – முனைவர் பா. அருள்செல்வி, காரைக்கால் அம்மையார் விருது – முனைவர் கி. மஞ்சுளா, சி. பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது – சட்டக் கதிர் (ஆசிரியர் – முனைவர் வி.ஆர்.எஸ்.சம்பத்), முதலமைச்சர் கணினித் தமிழ் விருது – முனைவர் இரா. அகிலன் ஆகியோருக்கும், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை பிரபா ஸ்ரீ தேவன், சீனி இராச கோபாலன், இந்திரன் (எ) பி.ஜி. இராஜேந்திரன், அலமேலு கிருஷ்ணன், ருத்ர துளசி தாஸ் (எ) இளம் பாரதி, பேராசிரியர் க. முத்துச்சாமி, நடராஜன் முருகையன், நிர்மாலயா (எ) எஸ்.மணி, இ.பா. சிந்தன், கௌரி கிருபானந்தன் ஆகியோருக்கும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் வே.ராஜாராமன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு