தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு…

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். நடப்பாண்டிற்கான தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ஆம் தேதி வியாழன் அன்று கொண்டாடப்படுகிறது. இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த பண்டிகையை சிறப்பான முறையில் கொண்டாட பலரும் திட்டமிட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் போனஸ் அறிவிப்பை பெரிதும் எதிர்பார்த்து ஊழியர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தான் தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், உற்பத்தியை பெருக்குவதிலும், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பொதுத்துறை நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. எனவே இவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் 2024-25ஆம் நிதியாண்டில் தீபாவளி சிறப்பு போனஸ் தொகை வழங்கப்படும்.


லாபம் ஈட்டியுள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்களில் ஒதுக்கப்படும் உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் 11.67 சதவீதம் கருணைத்தொகை வழங்கப்படும். ஒட்டுமொத்தமாக 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ் வழங்கப்படவுள்ளது.


சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள்
தகுதியுள்ள ஊழியர்கள் குறைந்தபட்சம் 8,400 ரூபாயும், அதிகபட்சம் 16,800 ரூபாயும் போனஸ் தொகையாக பெறுவார்கள். இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் ஆகியவற்றில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக 20 சதவீதம் வழங்கப்படும்.


உபரித்தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்கள்
மேலும் ஒதுக்கக்கூடிய உபரித்தொகை இல்லாத பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு மிகை ஊதியமாக 8.33 சதவீதமும், கருணைத் தொகையாக 1.67 சதவீதமும் என மொத்தம் 10 சதவீதம் போனஸாக வழங்கப்படும். இதில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் அடங்குவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த ஆண்டும் தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு…

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய