சென்னை:
தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். குடும்ப தலைவிகளுக்கான 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டம் குறித்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியிடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளதால் இன்று தமிழக சட்டசபையில் தொடங்க உள்ள பட்ஜெட் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பட்ஜெட் கூட்டத்தில் உரிமை தொகை தொடர்பான அறிவிப்பு மட்டும் இன்றி, பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளன. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்ற விவரமும் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கும். மேலும், இந்த பட்ஜெட்டில் துறை சார்ந்த சில முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 2 மணி நேரத்திற்கு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த பட்ஜெட் உரையை வாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் சட்டசபையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும். அதில் என்னென்ன அலுவல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும். சட்டப்பேரவையில் இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை தொடர்ந்து, நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
சுமார் 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. திமுக அரசை எதிர்த்தும், தமிழகத்தில் நிலவும் சட்ட-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கேள்வி எழுப்ப எதிர்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். நிறைவு நாளில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கை தொடர்பாக விரிவாக பதில் அளிப்பார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு