வான் சிறப்பு
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடித்துஎழிலி
தான்நல்காது ஆகி விடின்.
ஏராளமான நீரையுடைய பெரிய கடலும், மேகம் கடலிலிருந்து நீரைக்கொண்டு மீண்டும் அதனிடத்துப் பெய்யாது விடுமானால், தன் வளத்தில் குறையும். அதுபோல, பரிசுத்த ஆவியின் பொழிவு நடைபெறாவிட்டால் உலகில் அனைத்துச் சிறப்புகளும் குறைந்துவிடும்.