தூத்துக்குடி அருகே சிவன் கோவிலில் உலோக சிலைகள் திருட்டு: குற்றவாளிகளுக்கு 9 வருடங்களுக்கு பிறகு தண்டனை

தூத்துக்குடி மாவட்டம் சேரகுளம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சேரகுளம் கிராமத்தில் சோமசுந்தரேஸ்வரர் நித்திய கல்யாணி சிவன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் இருந்த நடராஜர், சிவகாமி, தேவி உள்ளிட்ட மூன்று உலோக சிலைகளை கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி இரவு மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து கோவில் பூசாரி ஐயப்பன் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் தேதி சேரகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சமீம்பானு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், தலைமை ஏட்டுகள் சிவபாலன், செல்வகுமார், போலீசார் செல்லக்கனி உள்ளிட்ட தனிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் புலன் விசாரணையில் செல்லதுரை, கணேசன், மாரியப்பன், முத்து என்கிற வேம்படி முத்து, ராமகிருஷ்ணன் என்கிற தாஸ், சண்முக வேலாயுதம், முருகன், பாலமுருகன், சங்கர், தினகரன், சதீஷ்குமார் ஆகிய 11 பேர் சேர்ந்து 3 உலோக சாமி சிலைகளையும் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த 11 பேரையும் போலீசார் கைது செய்து அவர்கள் சோமசுந்தரேஸ்வரர் சாமி கோவிலில் இருந்து திருடி வைத்திருந்த 3 உலோக சாமி சிலைகளை மீட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி இந்த வழக்கின் இறுதி அறிக்கையை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி இந்த வழக்கு கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த காலத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த முருகன் மற்றும் தினகரன் ஆகிய இருவரும் இறந்து விட்டனர். ராமகிருஷ்ணன் என்கிற தாஸ் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமுறை ஆனதால் அவரை இந்த வழக்கிலிருந்து தனியாக பிரித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில் கடந்த மாதம் (பிப்ரவரி) 27ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட செல்லதுரை, கணேசன், மாரியப்பன், முத்து என்கிற வேம்படி முத்து, ராமகிருஷ்ணன் என்கிற தாஸ், சண்முக வேலாயுதம் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதேபோல் பாலமுருகன், சங்கர், சதீஷ்குமார் ஆகிய மூன்று பேருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.2000 அபராதமும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

தூத்துக்குடி அருகே சிவன் கோவிலில் உலோக சிலைகள் திருட்டு: குற்றவாளிகளுக்கு 9 வருடங்களுக்கு பிறகு தண்டனை

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய