நரிக்குறவர்களை அனுமதிக்காதது ஏன்?… திரையரங்க நிர்வாகம் அளித்த விளக்கம்

சென்னை:
நடிகர் சிம்பு கதாநாயகனாக நடித்த பத்து தல’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. சென்னை கோயம்பேடு பகுதியிலுள்ள ரோகிணி திரையரங்கில், சிறுமி உட்பட நரிக்குறவர் பெண்கள் சிலர், சிம்புவின் திரைப்படத்தைப் பார்க்க ரோகிணி திரையரங்குக்குச் சென்றிருக்கின்றனர். பின்னர், அவர்கள் டிக்கெட் வாங்கிக்கொண்டு திரையரங்குக்குள் செல்ல முயன்றனர். அப்போது அவர்களைத் திரையரங்குக்குள் ஊழியர்கள் அனுமதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் டிக்கெட்டுடன் அவர்கள் வெளியில் காத்திருந்தனர். இந்தச் சம்பவத்தைப் பார்த்த படம் பார்க்க வந்தவர்களில் ஒருவர், தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்தார். அப்போது ஒருவர்,டிக்கெட் இருந்தால் உள்ளே அனுமதிக்க வேண்டியதுதானே?’ என்று திரையரங்கு ஊழியரிடம் கேட்கிறார். ஆனால், அவரோ அமைதியாக இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதும், கோயம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா தலைமையிலான போலீஸார் உடனடியாக திரையரங்குக்குச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில், ரசிகர் மன்றம் சார்பில் இலவசமாக டிக்கெட் சிலருக்கு விநியோகிக்கப்பட்டிருக்கிறது. அதைக் கொண்டு அவர்கள் அங்கு வந்திருக்கிறார்கள். டிக்கெட்டுகளுடன் காத்திருந்தவர்களுக்கு சிலர் ஆதரவாகப் பேசியதையடுத்து, அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு படம் பார்த்துவிட்டுச் சென்றது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் சர்ச்சையானதையடுத்து ரோகிணி திரையரங்க நிர்வாகம், “யூ/ஏ திரைப்படம் என்பதால் சிறுமியுடன் வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது” என்று விளக்கமளித்திருக்கிறது. போலீஸாரும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

நரிக்குறவர்களை அனுமதிக்காதது ஏன்?… திரையரங்க நிர்வாகம் அளித்த விளக்கம்

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய