நாடாளுமன்ற தேர்தல் பிறகு அதிமுக காணாமல் போகும் – விசிக தலைவர் திருமாவளவன்

இந்தியாவின் பெயரை மாற்றுவது தான் ஆர்எஸ்எஸ்யின் திட்டமாக உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் கவனமாக இருந்தால் அவர்களை நாம் ஆட்சியில் இருந்து தூக்கி எறிய முடியும் என திருமாவளவன் கூறினார். சென்னை வள்ளுவர்கோட்டத்தில் குலத்தொழிலை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கண்டித்து திக, திமுக, விசிக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், விஸ்வகர்மா யோஜனா என்கிற இந்த திட்டம் ஆபத்தானது சாதிய கட்டமைப்பை நிலைப்படுத்துவதற்கான ஒரு முயற்சி ஆகவே இந்த திட்டத்தை எதிர்த்து வருகிறோம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த திட்டத்திற்கு எதிரான குரல் ஒலிக்கவில்லை தமிழகத்தில் தான் முதல் குரல் வள்ளுவர் கோட்டத்தில் இருந்து ஒழிக்க தொடங்கி இருக்கிறது.

கடந்த சில நாட்களாக இந்த சனாதன தர்மம் குறித்த உரையாடல் விவாதம் நாடு தழுவிய விவாதமாக மாறி இருக்கிறது. இந்தியா என்கிற கூட்டணிக்குள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். திமுக இந்தியா கூட்டணியை உருவாக்கியது முதன்மையான இயக்கம் என்பதை நாடு அறியும் திமுக தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வோடு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கிற பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்ததன் விளைவாகத்தான் இந்த ஒரு சூழல் கனிந்திருக்கிறது. இந்தியா என்கிற கூட்டணி உருவாவதற்கான சூழல் பணிந்து இருக்கிறது. ஆகவே அவர்களுக்கு ஆத்திரம் திமுக மீது தான் தமிழக முதல்வர் மீது தான்.

பெரும்பான்மை இந்துக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் இது திமுகவுக்கு எதிரானது என்பதை விட இந்துக்களின் நம்பிக்கையை வஞ்சகமாக ஏமாற்றி இந்துக்களை ஏமாற்றி வாக்கு வங்கிக்கு திரட்டி கொள்வதற்கான ஒரு முயற்சி. 100 விழுக்காடு வாக்கு வங்கி அரசியலுக்கான வேலை திட்டம். எனவே இந்துக்கள் கவனமாக இருக்க வேண்டும். இது பற்றி அம்பேத்கர் தம் இறுதி மூச்சு வரை பேசியுள்ளார். சனாதனம் என்பது பயங்கரவாதம் என்று உதயநிதியின் தலையை சீவ 10 கோடி அறிவித்ததிலிருந்து தெரிகிறது. ராஜாஜி கொண்டு வந்தது குலக்கல்வி. இவர்கள் கொண்டு வருவது குலத்தொழில். அது அப்படியே நிலைப்படுத்த வேண்டும் என அவர்கள் ஏன் நினைக்கிறார்கள்.

நாங்கள் சமத்துவத்திற்காக போராடுகிறோம். நீங்கள் சமத்துவமின்மைக்கு போராடுகிறீர்கள்.நாங்கள் ஜனநாயகத்திற்காக போராடுகிறோம். நீங்கள் சனாதனத்திற்காக போராடுகிறீர்கள். இதற்கு வேறுபாடுகள் உண்டு. இந்தியா கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது. இந்த சூழலில் தான் நாம் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும். இந்தியாவின் பெயரை மாற்றுவது தான் ஆர் எஸ்எஸ்யின் திட்டமாக உள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் மிகுந்த எச்சரிக்கையோடு இருந்தால் மட்டுமே பா.ஜ.க வை ஆட்சியில் இருந்து அகற்ற முடியும். தமிழ்நாடு முதலமைச்சர் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த தேர்தலோடு அதிமுக என்ற கட்சி எங்கு உள்ளது என மக்கள் கேட்கும் அளவுக்கு அதன் நிலை சென்றுவிடும் எனறார் விசிக தலைவர் திருமாவளவன்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

நாடாளுமன்ற தேர்தல் பிறகு அதிமுக காணாமல் போகும் – விசிக தலைவர் திருமாவளவன்

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய