நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K. பழனிசாமி அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில்தமிழ் நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் நிறுவனர் சத்யம் சி. சரவணன் தலைமையில், அச்சங்கத்தின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தங்களது சங்கத்தின் முழு ஆதரவை தெரிவித்தனர். அதற்கு, கழகப் பொதுச் செயலாளர் தமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்வின்போது, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அ. அன்வர்ராஜா, ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் M.A. முனியசாமி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் K.C. ஆணிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு