நாமக்கல் அருகே ஓட்டல் உரிமையாளரின் வீட்டில் நகை கொள்ளை

நாமக்கல்: பரமத்தி வேலூர் அருகே தாபா ஓட்டல் உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து தனது மகள் திருமணத்துக்காக வைத்திருந்த 60 பவுன் நகை மற்றும் ரூ.9 லட்சம் பணத்தைத் திருடி சென்றவர்களை போலீஸார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (54). இவர் அப்பகுதியில் தாபா ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மகள் நிஷாந்திக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று காலை கந்தசாமி தனது மனைவி கலைச் செல்வி (45) உள்ளிட்ட குடும்பத்தினருடன் ஜவுளி வாங்க ஈரோட்டுக்கு சென்றார்.

வீட்டில் கந்தசாமியின் தாயார் அருக்காணி மட்டும் இருந்தார். கந்தசாமி சென்ற சிறிது நேரத்தில் மற்றொரு காரில் இரு மர்ம நபர்கள் வீட்டுக்கு வந்துள்ளனர். இருவரும் அங்கிருந்த அருக்காணியிடம், “கந்தசாமி தங்களை வேலைக்கு வரச் சொல்லியதாக” தெரிவித்துள்ளனர். அதற்கு அருக்காணி, “வீட்டில் உள்ள அனைவரும் வெளியூர் சென்றுள்ளனர். நாளை வாருங்கள்’ என்றார். பின்னர் அவர் வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள விவசாய தோட்டத்துக்குச் சென்றார்.

சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்புறக் கதவு உடைந்து இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, மகளின் திருமணத்துக்காக வீட்டின் பீரோவில் வைத்திருந்த 60 பவுன் நகை, ரூ.9 லட்சம் பணம் ஆகியவை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

தகவல் அறிந்த அங்கு வந்த ஏடிஎஸ்பி ராஜூ, டிஎஸ்பி ராஜமுரளி ஆகியோர் விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் குற்றவாளிகளின் தடயங்களை பதிவு செய்தனர். மேலும், இதுதொடர்பாக பரமத்தி வேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நகை மற்றும் பணத்தைத் திருடி சென்றவர்களைத் வலை வீசி தேடி வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

நாமக்கல் அருகே ஓட்டல் உரிமையாளரின் வீட்டில் நகை கொள்ளை

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய