சென்னை:
பராமரிப்பு பணி காரணமாக நாளை 9 மின்சார ரெயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரெயில்வே கோட்டம் சார்பில் தெரிவித்திருப்பதாவது:
சென்னை மூர் மார்க்கெட் – அரக்கோணம், சென்னை மூர் மார்க்கெட் – திருத்தணி செல்லக்கூடிய மின்சார ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூர் மார்க்கெட்டில் இருந்து திருப்பதி செல்லும் சிறப்பு மின்சார ரெயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.