மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 233 புள்ளிகள் உயர்வடைந்து 65,666 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 71 புள்ளிகள் உயர்ந்து 19,515 ஆக இருந்தது.
காலை 10:14 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 362.36 புள்ளிகள் உயர்வடைந்து 65,795.66 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 113.15 புள்ளிகள் உயர்ந்து 19,557.15 ஆக இருந்தது. உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழல்கள், உலோகம் மற்றும் வங்கிப்பங்குகளின் ஏற்றத்தால் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை உயர்வுடன் தொடங்கின.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்டஸ்இன்ட் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஆக்ஸிஸ் பேங்க், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபின்சர்வ், ஐசிஐசிஐ பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், கோடாக் மகேந்திரா, இன்போசிஸ், பஜாஜ் பைனான்ஸ், டைட்டன் கம்பெனி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, விப்ரோ, எம் அண்ட் எம், டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், நெஸ்ட்லே இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, பாரதி ஏர்டெல் பங்குகள் உயர்வில் இருந்தன. ஜியோ பைனான்ஸ், என்டிபிசி பங்குகள் சரிவில் இருந்தன.