இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 910 புள்ளிகள் உயர்ந்தது.
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. அதானி குழும நிறுவன பங்குகளின் விலை வீழ்ச்சி கட்டுக்குள் இருப்பது, பணவீக்கம் குறையும் நிலையில் உள்ளதாக உலக வங்கிகள் குறிப்பு தெரிவித்து இருப்பதால் வட்டி விகித உயர்வு நடவடிக்கை விரைவில் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டெக் மகிந்திரா, எச்.சி.எல். டெக்னாலஜிஸ் மற்றும் விப்ரோ ஆகிய 3 நிறுவன பங்குகளை தவிர்த்து மற்ற 27 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,349 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,190 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.129 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.266.70 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.94 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 909.64 புள்ளிகள் உயர்ந்து 60,841.88 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 243.65 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,854.05 புள்ளிகளில் முடிவுற்றது.