ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் பார்சல் கட்ட தாமதம் ஆனதால் உணவக உரிமையாளரின் விரலை கடித்து துப்பிய வாடிக்கையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி அலுவலுகம் அருகே ஓட்டல் கடை நடத்தி வருபவர் கதிரேசன் (50). இவரது கடைக்கு அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வந்து உணவருந்திச் செல்வது வழக்கம். இதனால் எந்த நேரமும் இவரது கடையில் கூட்டம் அலைமோதிக் கொண்டு இருக்கும். இவரது கடையில் வேலையாட்கள் யாரும் வைத்துக் கொள்ளாமல் இவரே வேலை செய்து வருகிறார். இதனால் கதிரேசனே அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்.
இந்நிலையில், முஷ்டகுறிச்சியைச் சேர்ந்த வழிவிட்டான் (45) என்பவர் கதிரேசன் ஓட்டலுக்கு வந்து பார்சல் சாப்பாடு கேட்டுள்ளார். சற்று தாமதமாகும் என்று கதிரேசன் கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த வழிவிட்டான் அருகில் இருக்கும் சமையல் கரண்டியால் கதிரேசனை தலையில் பயங்கரமாக அடித்துள்ளார்.
மேலும், கதிரேசனின் இடது கையின் ஆள்காட்டி விரலை கடித்தார். இதில் அவரது விரல் துண்டானது. துண்டான விரலை ஓட்டலுக்கு முன்பு உள்ள கழிவுநீர் கால்வாயிலே வழிவிட்டான் துப்பி விட்டு அங்கிருந்து தப்பியோடினார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர். கதிரேசனின் துண்டான ஆள்காட்டி விரலின் தேடிப்பார்த்தனர். ஆனால் விரல் கிடைக்கவில்லை.
இதையடுத்து, வலியில் துடிதுடித்த கதிரேசனை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் கதிரேசன் புகார் அளித்தார். புகாரின்பேரில் கை விரலை கடித்து துப்பிய வழிவிட்டானை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு