பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம் (RWBCIS) ஆகியவற்றில் சில அம்சங்களைத் திருத்தவும் புதிய அம்சங்களைச் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2021-22 முதல் 2025-26 வரை 69,515.71 கோடி ரூபாய் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மற்றும் வானிலை அடிப்படையிலான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை 2025-26 வரை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த முடிவு 2025-26 வரை நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு இயற்கைப் பேரழிவுகளிலிருந்து பயிர்களை பாதுகாக்க உதவும்.இது தவிர, இத்திட்டத்தை செயல்படுத்துவதில்  வெளிப்படைத்தன்மை, இழப்பீட்டைக் கணக்கிடுதல் மற்றும் கோரிக்கைகளை தீர்த்து வைத்தல் ஆகியவற்றை அதிகரிப்பதற்கும் பெரும் அளவில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்குஅமைச்சரவை அனுமதித்துள்ளதோடு ரூ.824.77 கோடி தொகுப்பு நிதியுடன் புத்தாக்கங்கள் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நிதியத்தை உருவாக்கவும்  ஒப்புதல் அளித்துள்ளது.யெஸ்-டெக், விண்ட்ஸ் போன்ற திட்டங்களின் கீழ் தொழில்நுட்ப முயற்சிகளுக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குமா நிதியளிக்க இந்த நிதியம் பயன்படுத்தப்படும்.தொலையுணர்வு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மகசூல் மதிப்பீடுகளுக்கு குறைந்தபட்சம் 30% முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 9 பெரிய மாநிலங்கள் அதாவது ஆந்திரா, அசாம், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகியவை இந்த தொழில்நுட்பத்தைத் தற்போது செயல்படுத்தி வருகின்றன. மத்தியப் பிரதேசம் 100% தொழில்நுட்ப அடிப்படையிலான மகசூல் மதிப்பீட்டை ஏற்றுக்கொண்டுள்ளது.வட்டார அளவில் தானியங்கி வானிலை மையங்களையும், ஊராட்சி அளவில் தானியங்கி மழைமானி நிலையங்களையும் அமைக்க வானிலை தகவல் மற்றும் வலைப்பின்னல் தரவு அமைப்புகள் (விண்ட்ஸ்) திட்டமிட்டுள்ளன. விண்ட்ஸ் திட்டத்தின் கீழ், தற்போதைய நெட்வொர்க் எண்ணிக்கையில் 5 மடங்கு அதிகரிப்புடன் ஹைப்பர் லோக்கல் வானிலை தரவு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. கேரளா, உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, அசாம், ஒடிசா, கர்நாடகா, உத்தராகண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 9 பெரிய மாநிலங்கள் ‘விண்ட்ஸ்’ திட்டத்தை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. மற்ற மாநிலங்களும் இத்திட்டத்தை செயல்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் இத்திட்டங்களின்கீழ் அதிகபட்ச பலன்களை  அளிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக பிரீமியம் மானியத்தில் 90 சதவீதத்தை வடகிழக்கு மாநிலங்களுடன் மத்திய அரசு பகிர்ந்து கொள்கிறது. இருப்பினும், இத்திட்டம் தன்னார்வத் திட்டம் என்பதாலும், வடகிழக்கு மாநிலங்களில் மொத்த பயிரிடப்படும் பரப்பு குறைவு என்பதாலும், நிதி ஒப்படைக்கப்படுவதைத் தவிர்க்கவும், நிதி தேவைப்படும் பிற வளர்ச்சித் திட்டங்களில் மறு ஒதுக்கீடு செய்யவும் நெகிழ்வுத்தன்மை வழங்கப்பட்டுள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம், மறுசீரமைக்கப்பட்ட வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம் (RWBCIS) ஆகியவற்றில் சில அம்சங்களைத் திருத்தவும் புதிய அம்சங்களைச் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய