ரூ.35 ஆயிரம் கோடி பெட்ரோ கெமிக்கல் திட்ட பணிகளை நிறுத்திய அதானி குழுமம்

குஜராத்:
அதானி குழுமம் குஜராத்தில் உள்ள முந்த்ராவில் ரூ.34,900 கோடி மதிப்பிலான பெட்ரோ கெமிக்கல் திட்டப் பணிகளை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் அண்மையில் அதானி குழுமம் பல ஆண்டுகளாக முறைகேடான பங்கு கையாளுதல் மற்றும் கணக்கியல் மோசடி திட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்று குற்றம் சாட்டியது. இதனையடுத்து அதானி குழுமம் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கும், முதலீட்டாளர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கும் நிறுவனங்களின் வளங்களில் (நிதி) கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் (2022 ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி) நாட்டின் மின்சார பயன்பாடு 1,37,557 கோடி யூனிட்களாக உயர்ந்துள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலத்தை காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும். 2021-22ம் நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் நம் நாட்டில் 1,24,554 கோடி யூனிட்களாக இருந்தது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு நிறுவனமான வால்ட் டிஸ்னி, செலவின குறைப்புகளை முன்மொழியுமாறும், வரும் வாரங்களில் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் பட்டியலை தொகுக்குமாறும் தனது மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் டிஸ்னி நிறுவனம் தனது பணியாளர்களில் குறைந்தபட்சம் 4 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் மது வாங்குபவர்கள் வாங்கும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் பசு செஸ் (வரி) விதிக்கப்பட உள்ளது. இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தாக்கல் செய்த அம்மாநில பட்ஜெட்டின்படி, இந்த நடவடிக்கையால் (பசு செஸ் வரி விதிப்பால்) ஒவ்வொரு ஆண்டும் ரூ.100 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் 2022 மார்ச் வரையிலான 3 ஆண்டுகளில் பசு செஸ் வாயிலாக ரூ.2,176 கோடி ஈட்டியுள்ளது. ஆனால் ராஜஸ்தான் அரசு, மது விற்பனை மீது பசு செஸ் வரி விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

ரூ.35 ஆயிரம் கோடி பெட்ரோ கெமிக்கல் திட்ட பணிகளை நிறுத்திய அதானி குழுமம்

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய