100-வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஜிஎஸ்எல்வி/எஃப் -15 ராக்கெட் மூலம் என்விஎஸ் – 02 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதன் மூலம்  ஶ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக 100 ராக்கெட்டுகள் செலுத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் சாதனையை இஸ்ரோ படைத்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்திலுள்ள இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று காலை 06:23 மணிக்கு ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட என்விஎஸ் -02 செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.இதன்மூலம் நேவிகேஷன் வரிசையில் 5 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் இன்னும் மூன்று செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்ட பின் இந்த திட்டம் முழுமையடையும் என்று இஸ்ரோவின் புதிய தலைவராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்வெளி விஞ்ஞானி டாக்டர் வி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறினார். இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் வெற்றிகரமான 100 ராக்கெட்டுகள் எனும் சாதனை நம் நாட்டிற்கே பெருமை என்று அவர் தெரிவித்தார். இந்த சாதனைக்காக அரும்பாடுபட்ட முன்னாள் இந்நாள் விஞ்ஞானிகள், உள்ளிட்ட அனைவருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இதுவரை, 500-க்கும் அதிகமான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக தெரிவித்த அவர், இதில் 400-க்கும் அதிகமான வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் அடங்கும் என்றார்.இஸ்ரோவின் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்து விளக்கிய அவர், அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய ஶ்ரீஹரிகோட்டாவின் மூன்றாவது ஏவுதளம் இன்னும் நான்கு ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் நாசா கூட்டு ஆராய்ச்சியில் தயாராகி வரும்  செயற்கைக்கோள் நிசார் விரைவில் விண்ணில் செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.அடுத்த தலைமுறை ராக்கெட் கட்டுமானம், ககன்யான் திட்டம், சந்திரயான் 4, 5 திட்டம், இந்தியாவின் சொந்த விண்வெளி மையம் அமைத்தல் ஆகியவை அடுத்தடுத்து செயல்படுத்தப்படும் என்று கூறிய அவர், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள திட்டங்கள் முன்னுரிமை அடிப்படையில் விரைந்து செயல்படுத்தப்படும் என்றார்.

இந்திய விண்வெளித் துறை தற்சார்பை நோக்கி முன்னேறி வருவதாக தெரிவித்த டாக்டர் வி நாராயணன், வளர்ச்சியடைந்த இந்தியா எனும் இலக்கை எட்ட இஸ்ரோ சிறப்பாக பங்காற்றும் என்றார். இந்த ஆண்டு மேலும் பல செயற்கைக்கோள் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

100-வது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய