2026 சட்டமன்ற தேர்தலில் பாமக ஆட்சியை பிடிக்கும் – அன்புமணி ராமதாஸ் பேட்டி

தர்மபுரி சட்டப் பேரவைத் தொகுதி பாமக வாக்குச் சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் வாக்கு சேகரிப்பு தொடர்பாக ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசும்போது, தமிழகத்தில் வருகிற மக்களவைத் தேர்தலுக்கு நாம் இப்போதே தயாராக உள்ளோம். இந்த தேர்தலுக்கான களப்பணியில் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

ஒவ்வொரு வீடாக நேரடியாக சென்று வாக்காளர்களை சந்திக்க வேண்டும். தொடர்ந்து அவர்களை நாம் சந்திப்பதன் மூலம் அவர்களின் ஆதரவை பெற முடியும். கடந்த மக்களவைத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் நாம் வெற்றி வாய்ப்பு இழந்தோம். எதற்காக நாம் இழந்தோம் என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும். வருகிற 2024 மக்களவைத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் பாமக போட்டியிடும். இதில் பா.மா.க வெற்றி பெறுவது உறுதி. தமிழகத்தில் பாமக என்கிற ஒரு கட்சி இல்லை என்றால் மது ஆறாக பெருகி ஓடும். தெருவுக்கு தெரு மது கடைகளை வந்து இருக்கும். ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் மதுவை கொடுத்திருப்பார்கள். நாம் தொடர்ந்து போராடுவதன் மூலம் தமிழகத்தில் பூரண மது விலக்கை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வோம்.

தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். ஒவ்வொரு தொகுதியாக சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து வருகிறேன். மக்களின் மனதில் மிகப்பெரிய மாற்றம் வந்துள்ளது. இதன் மூலம் வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் பாமக நிச்சயம் ஆட்சியை பிடிக்கும். இதற்கு நாம் அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

2026 சட்டமன்ற தேர்தலில் பாமக ஆட்சியை பிடிக்கும் – அன்புமணி ராமதாஸ் பேட்டி

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய