நைஜீரியா:
நைஜீரியாவில் ஒண்டோ மாகாணத்தில் எண்ணை டேங்கர் ஒன்று வெடித்ததால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 20 உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. நைஜீரியாவில் நாள் ஒன்றுக்கு சுமார் 2 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. நைஜீரியா நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் உலக நாடுகள் பலவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில், ஒண்டோ மாகாணத்தில் இன்று எண்ணெய் டேங்கர் ஒன்று வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 3 குழந்தைகள், 1 கர்ப்பிணி உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தீ விபத்தால், லாகோஸ்-பெனின் விரைவுச் சாலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தச் சாலையைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். டேங்கர் வெடித்துச் சிதறிய விபத்தால், அப்பகுதி தீப்பிழம்புடன் காட்சியளிக்கிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதே நேரத்தில், இதுபோன்ற எண்ணெய் டேங்கர்கள் வெடித்து விபத்துகள் ஏற்படுவதும் இங்கு அடிக்கடி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு