ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் தேதி சர்வதேச வாய்துர்நாற்ற ஒழிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய நோக்கமே மக்கள் மத்தியில் வாய் சுகாதாரம் பேணுவதை எடுத்துரைப்பதே ஆகும். மக்கள் தங்களின் வாய் சுகாதாரம், பற்களின் ஆரோக்கியத்தை பேணுவதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் நோக்கம்.
இந்த ஆண்டு உங்கள் வாயை நினைத்து பெருமிதம் கொள்ளுங்க. இது மூன்று ஆண்டுகளுக்கான கருப்பொருளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2021ல் சர்வதேச டென்டல் ஃபவுண்டேஷன் இதனை தேர்வு செய்தது. முதலாம் ஆண்டு பிரச்சாரத்தின் போது வாய்நலத்தின் பொதுவான அவசியங்கள் பற்றி பிரச்சாரம் செய்யப்பட்டது. இரண்டாம் ஆண்டு அதாவது 2022ல் மகிழ்ச்சிக்கும் நலனுக்கும் ஆரோக்கியமான வாய் என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆண்டு வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் தேவை வாய் ஆரோக்கியம் என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
சர்வதேச வாய்துர்நாற்ற ஒழிப்பு தினம் முதன்முதலில் 2007 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது.
வாய்வழி தொற்று, துரித உணவை அதிகமாக பயன்படுத்துதல், வாய் வறட்சி அல்லது எந்தவிதமான போதைப்பொருள் உள்ளிட்ட மோசமான வாய் துர்நாற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளன. நம் வாயில் உள்ள உமிழ்நீர் நம் வாயை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது பல நோய்களிலிருந்து பற்களையும் பாதுகாக்கிறது. இருப்பினும், வாயில் உமிழ்நீர் இல்லாதது பற்களில் பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
வாய் துர்நாற்றத்தை குறைக்க சில வழிகள்
சாப்பிட்ட 2 அல்லது 3 மணி நேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும்.
அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
வாய் துர்நாற்றம் போக சூயிங்கம் அல்லது இதற்கென்றே விற்கும் பிரத்யேக மிட்டாய்களை வாங்கி பயன்படுத்தலாம். மது மற்றும் புகைப்பிடித்தல் பழக்கத்தை கைவிடுவது சிறந்தது. வெங்காயம், பூண்டு போன்ற உணவுகளை தவிர்க்கலாம். நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.