அலைமோதும் தொண்டர்கள்.. முன்கூட்டியே தொடங்கும் தவெக மாநாடு…

தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் இன்று நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு கட்சியின் தலைவர் விஜய் நிர்வாகியின் காரில் சென்று மாநாடு திடலை பார்வையிட்டார். மேலும் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். மாநாட்டு திடலுக்கு அருகில் உள்ள வீட்டில்தான் விஜய் தற்போது தங்கியுள்ளார்.

இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக தொண்டர்கள் நேற்று இரவு முதலே சாரை சாரையாக மாநாட்டு திடலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். பெண்களும் மாநாட்டில் பங்கேற்பதற்காக திரண்டனர். மாநாட்டு திடலில் 50000 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டிருந்ததால் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக அதிகாலையிலேயே தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு குவிந்தனர்.

பிற்பகலுக்கு பிறகு மாநாடு நடைபெறும் இடத்திற்குள் தொண்டர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அத்துமீறி காலையிலேயே மாநாட்டு திடலுக்குள் நுழைந்த தொண்டர்கள் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்து இடம் பிடித்தனர். வெயில் காரணமாக அவர்களில் 80க்கும் மேற்பட்டோர் தற்போது மயக்கம் அடைந்துள்ளனர். ஏற்கனவே மாநாட்டு நிர்வாகிகள் மருத்துவ முகாம்களை மாநாட்டு திடலில் அமைத்துள்ளனர்.

அந்த மருத்துவ குழுவினர் மயக்கம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மயக்கம் அடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.மேலும் தொண்டர்களுக்கு உடனடியாக குடிநீர் உள்ளிட்ட அனைத்தும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளனர. இதனால் விக்கிரவாண்டி சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது தொண்டர்கள் தொடர்ந்து வருகை புரிவதால் ஆம்புலன்ஸ்கள் கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தொண்டர்களின் வருகை அதிகரித்து வருவதாலும் தொண்டர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே அமர்ந்திருப்பதால் முன்கூட்டியே தமிழக வெற்றி கழகம் கட்சியின் மாநாட்டை தொடங்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. இதனை தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகளும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும், 5 மணிக்கு கட்சியின் தலைவர் விஜய், மாநாட்டு மேடைக்கு வருகை புரிவார், அங்கு அமைக்கப்பட்ட பிரத்தியேக நடைமேடையில் ராம்ப் வாக் செய்து தொண்டர்களை நோக்கி கையசைப்பார் கொடியேற்றுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அனைத்து நிகழ்வுகளும் முன்கூட்டியே நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 3 மணிக்கே மாநாடு தொடங்கும் என தமிழக வெற்றி கழகம் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

அலைமோதும் தொண்டர்கள்.. முன்கூட்டியே தொடங்கும் தவெக மாநாடு…

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய