அமெரிக்க அதிபர் தேர்தல்…டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை…!

அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய சூழலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் பல சுற்றுகள், பல மாகாணங்களில் வாக்குகள் எண்ணப்பட வேண்டியுள்ளது. எப்போது வேண்டுமானாலும் களம் மாறலாம்.

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக திகழும் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் இருக்கின்றன. இவற்றில் 538 எலக்டோரல் காலேஜ் வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளுக்கு மேல் பெறும் வேட்பாளரே வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்பார்.

அதிகபட்சமாக கலிபோர்னியா மாகாணத்திற்கு 54 வாக்குகள் உள்ளன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு மாகாணத்தில் எந்த அதிபர் வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான மக்களின் வாக்குகளை பெறுகிறாரோ, அவருக்கு அந்த மாகாணத்தின் அனைத்து எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் வழங்கப்படும்.

அமெரிக்காவில் உள்ள மாகாணங்களில் அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, பென்சில்வேனியா, விஸ்கான்சின், வடக்கு கரோலினா ஆகியவை ஸ்விங் மாகாணங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அதாவது, கமலா ஹாரிஸ், டொனால்ட் ட்ரம்ப் இடையில் போட்டி கடினமாக இருக்கும். வெற்றி வாய்ப்பு என்பதை கணிப்பதை சிரமம்.

வாக்கு எண்ணிக்கை: இந்நிலையில் இன்று (நவம்பர் 6) காலை 6 மணி நிலவரப்படி, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்றிருக்கிறார். டொனால்ட் ட்ரம்ப் 19 மாகாணங்களிலும், கமலா ஹாரிஸ் 3 மாகாணங்களிலும் முன்னிலை இருக்கின்றனர். ட்ரம்ப் இன்டியானா, கென்டக்கி, மேற்கு விர்ஜினியா ஆகிய மாகாணங்களில் வெற்றி பெற்றுவிட்டார்.

ட்ரம்ப் முன்னிலை: இதில் இண்டியானா மாகாணத்தில் 11 எலக்டோரல் காலேஜ் வாக்குகளும், கென்டக்கியில் 8 எலக்டோரல் காலேஜ் வாக்குகளும், மேற்கு விர்ஜினியாவில் 4 எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் இருக்கின்றன. தெற்கு கரோலினா, ஜார்ஜியா, ப்ளோரிடா உள்ளிட்ட மாகாணங்களில் முன்னிலை பெற்றுள்ளார்.

கமலா ஹாரிஸ் வெற்றி: அதுவே கமலா ஹாரிஸை எடுத்து கொண்டால் வெர்மண்ட் மாகாணத்தில் வெற்றி பெற்றுவிட்டார். விர்ஜினியா, நியூ ஹாம்ஸ்ஷைர் உள்ளிட்ட மாகாணங்களில் முன்னிலை வகிக்கிறார். இதுவரை பெற்ற வாக்குகள் அடிப்படையில் பார்க்கும் போது டொனால்ட் ட்ரம்ப் 46,71,232 வாக்குகளும் (54.6 சதவீதம்), கமலா ஹாரிஸ் 38,16,312 வாக்குகளும் (44.6 சதவீதம்) பெற்றிருக்கின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

அமெரிக்க அதிபர் தேர்தல்…டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை…!

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய