விசிக மாவட்ட நிர்வாகத்தில் மறுசீரமைப்பு… திருமாவளவன் கொண்டு வரும் மாற்றம்!

தமிழக அரசியலில் முக்கிய அரசியல் கட்சியாக திகழ்ந்து வரும் விடுதலை சிறுத்தைகள் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. தேர்தல் அரசியலில் கூட்டணி வியூகத்தை தொடர்ந்து கையிலெடுத்து வரும் திருமாவளவன், தங்கள் கட்சியை அமைப்பு ரீதியில் வலுவாக்க முடிவு செய்துள்ளார். அதன்படி, மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 144 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

விசிக மாவட்ட செயலாளர்கள்

தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. எனவே ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற கணக்கில் காய் நகர்த்துகின்றனர். அப்படி பார்த்தால் இன்னும் 90 பேரை நியமிக்க வேண்டியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் உயர்மட்ட குழு தொடர் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கட்சி தொண்டர்கள் மத்தியில் நேரலையில் பேசினார்.

அதில், மாவட்ட நிர்வாகத்தை சீரமைப்பது பற்றி ஏற்கனவே உங்களிடம் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டேன். அதுதொடர்பாக மீண்டும் நினைவூட்டும் வகையில் இந்த நேரலை. 234 தொகுதிகளுக்கான மாவட்ட செயலாளர்களில் எஞ்சிய 90 பேரை புதிதாக ஆட்களை நியமிக்க இருக்கிறோம்.

திருமாவளவன் திட்டம்

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் மாவட்ட செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர்கள், கிளை செயலாளர்கள், ஊடக ஒருங்கிணைப்பாளர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆகியோர் அடங்கிய நிர்வாக குழுவை நியமிக்க வேண்டும். இதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அதன்படி, ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர், ஒரு மாவட்ட பொருளாளர், 4 மாவட்ட துணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

அதில் நிலப்பரப்பின் அடிப்படையில் 2 மாவட்ட துணைச் செயலாளர்கள், ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கு ஒரு பெண் மாவட்ட துணைச் செயலாளர், தலித் அல்லாத ஒரு மாவட்ட செயலாளர் என நியமிக்கப்படுவர். ஊடக ஒருங்கிணைப்பாளர் ஒட்டுமொத்தமாக ஒரு தொகுதி மாவட்டத்திற்கு ஒருவர் நியமனம் செய்யப்படுவார். இவை இல்லாமல் 2 மாவட்ட செயற்குழு உறுப்பினர்களை நியமிக்க இருக்கிறோம். ஏற்கனவே நியமிக்கப்பட்ட 144 மாவட்ட செயலாளர்கள் தொடர்ந்து செயல்படுவர் என்று திருமாவளவன் கூறினார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

விசிக மாவட்ட நிர்வாகத்தில் மறுசீரமைப்பு… திருமாவளவன் கொண்டு வரும் மாற்றம்!

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய