பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 5 சிறுமிகள் – விழுப்புரத்தி 4 சிறுவர்கள் கைது…!

விழுப்புரம் அருகே 6 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற போது அவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருந்ததைகயும் இதை கவனித்த அவரின் ஆசிரியர் இது குறித்து விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் நல அலுவலரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். பின் அச்சிறுமியை முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

அப்போதுதான் அச்சிறுமி கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார் என்பது தெரியவந்தது. அச்சிறுமியிடம் குழந்தைகள் நல அலுவலர்கள் மேற்கொண்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 14 முதல் 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்தது தெரிய வந்தது. தன்னைப்போல், மேலும் 4 பெண் குழந்தைகளுக்கும் அவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீஸார் 4 சிறுவர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக 6 வயதுடைய 5 பெண் குழந்தைகளுக்கும் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்ததும், அவர்களுக்கு ஆபாச படங்களை காண்பித்தும், ஆபாசமாக அவர்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் மாவட்ட இளஞ்சிறார் மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் கடந்த 29ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் இந்த வழக்கை வெளியில் தெரியாமல் மறைத்து வந்துள்ளார். அதிமுக அலுவலகத்தில் சிவி சண்முகம் எம்பி இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததை அடுத்தே, காவல்துறையினர் இது தொடர்பான பத்திரிகை செய்தியை முன்வந்து வெளியிட்டனர்.

வட மாநிலத்தைச் சேர்ந்தவரா? காவல்துறை மறுப்பு: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜானகிபுரம் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறிய சிறுமியின் தந்தை ஐஸ் விற்பனை செய்து வந்ததாகவும், வாடகை வீட்டில் இருந்த போது வீட்டு உரிமையாளரின் மகன், பெண் குழந்தைக்கு முதலில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், பின்னர் தனது நண்பர்களை கூட்டுக்கு சேர்த்து தொடர்ந்து இந்த பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது. அப்பெண் குழந்தையின் பூர்வீகம் தமிழ்நாடு தான், வடமாநிலம் இல்லை என்று காவல்துறையினர் உறுதியாக தெரிவித்திருந்தனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 5 சிறுமிகள் – விழுப்புரத்தி 4 சிறுவர்கள் கைது…!

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய