லக்னோ: மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டியில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் வேளையில், உத்தரபிரதேச அரசோ சற்று வித்தியாசமாக யோசித்து ‘க்ளைமெட் ஸ்மார்ட்’ கிராமங்கள் (Climate Smart Villages) என்ற புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த ‘க்ளைமெட் ஸ்மார்ட்’ கிராமம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்காகவே பிரத்யேக வானிலை ஆய்வு மையம், சோலார் மின் உற்பத்தி உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருக்கின்றன.
பருவநிலை மாற்றம் தனது கோர முகத்தை காண்பிக்க தொடங்குவதற்கு முன்பாக, விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றும் நோக்கில் இந்த முன்மாதிரி திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு.