சென்னை: திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். ‘மார்ச் 1 திராவிட பொன்நாள்’ என்றும் முயற்சி… முயற்சி… முயற்சி… அதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.