மோர்ஸ்பை: பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவானது.
மோர்ஸ்பை துறைமுகத்தில் இருந்து 560 கி.மீ. தொலைவிலும், 600 கி.மீ. ஆழத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ கினியா அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியிருந்தது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின்போது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. பப்புவா நியூ கினியாவில் தொலைதூரத்தில் உள்ள நியூ பிரிட்டன் பகுதியில் மூன்று நாட்களில் ஏற்படும் இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். மோர்ஸ்பை துறைமுகத்தில் இருந்து 560 கி.மீ. தொலைவிலும், 600 கி.மீ. ஆழத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.