சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் தகுதியை பெற்றிருப்பின் முதன்மை அஞ்சல் தலைவர் அண்ணா சாலை தலைமை அலுவலகத்தில் 04.01 2025 அன்று காலை 10 30 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் பங்கேற்கலாம் தேவையான தகுதிகள்
அ) கல்வி தகுதி குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆ) வயது வரம்பு குறைந்தபட்சம் 18-வயது
இ) சுய தொழில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள் அங்கன்வாடி மஹிளா மண்டல் பணியாளர்கள் சுய உதவிக்குழு உறுப்பினர்கள். முன்னாள் ராணுவத்தினர். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்
ஈ )விரும்பத்தக்க தகுதிகள் ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள். கணினிப் பயிற்சி உள்ளவர்கள் சொந்தப்பகுதி குறித்து நன்கு அறிந்தவர்கள் சென்னை மாநகராட்சியை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்
உ )இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை
ஊ )மேற்கண்ட தகுதியுடையவர்கள் மூன்று புகைப்படத்துடன் (பாஸ்போர்ட்அளவு). அசல் இரண்டு நகல் வயதுச்சான்று முகவரிச் சான்று மற்றும் கல்விச் சான்றுடன் நேர்காணலுக்கு வர வேண்டும் நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் (NSC) அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை (KVP) பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்இது அஞ்சல் அலுவலக வேலை வாய்ப்பு அல்ல இது இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதல்கள்படி நேர்காணல் மூலம் புதிய நேரடி முகவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் இந்த நேர்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக நடத்தப்படுகிறது முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் விற்பனை செய்யும் ஆயுள் காப்பீடு பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு