செம சம்பவம் இருக்கு…. உள் தமிழகம் , தென் தமிழகம், கொங்கு, பெங்களூரு.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை…!

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் கடந்த 15ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி உள்ள நிலையில் ஆரம்பித்த வேகத்திலேயே தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பரவலாக நல்ல மழை பெய்தது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மூலம் தமிழகத்திற்கு கூடுதல் மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திரா நோக்கி நகர்ந்தது. இதனால் தமிழகத்திற்கான மழை வாய்ப்பு குறைந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக வலுப்பெற்று ஒடிசா மற்றும் மேற்குவங்கம் இடையே இந்த புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த புயலுக்கு டானா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இது போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பொழிவு இருந்து வருகிறது.

குறிப்பாக உள் தமிழகத்திலும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் நல்ல மழை பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், மழை நிலவரம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி உள் தமிழகம், தென் தமிழகம் மற்றும் மேற்கு தமிழ்நாட்டின் கொங்கு பகுதிக்கு இன்று பெரிய நாள் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் இந்த பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என தெரிகிறது. இதே போல் பெங்களூரில் இன்றும் சேர்த்து வரும் 24ஆம் தேதி வரை பரவலாக நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார். மேலும் செங்கோட்டை மற்றும் குற்றாலம் பகுதிகளை சுற்றி தெற்கே மிக கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

அண்ணா நகர் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் இன்று பெய்தது போல KTCC பெல்ட் என குறிப்பிடப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இங்கும் அங்குமாக மழை இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

செம சம்பவம் இருக்கு…. உள் தமிழகம் , தென் தமிழகம், கொங்கு, பெங்களூரு.. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை…!

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய