பிப்ரவரி 10, 2025 அன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி, தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் 8-வது பதிப்பின் முதல் அத்தியாயத்தின் போது, புதுதில்லியில் உள்ள சுந்தர் நர்சரியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த முறைசாரா மற்றும் நுண்ணறிவு கொண்ட அமர்வில், பிரதமர் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுடன் பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடினார். கலந்துகொண்ட 36 மாணவர்கள், ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் பற்றிய மதிப்புமிக்க பாடங்களை பிரதமரிடம் இருந்து கற்றுக்கொண்டனர். இந்த ஊடாடும் அமர்வு மாணவர்களுக்கு மதிப்புமிக்க நுண்ணறிவுகளையும், கல்வி சார்ந்த சவால்களை நம்பிக்கையுடனும் வளர்ச்சி மனப்பான்மையுடனும் வழிநடத்துவதற்கான நடைமுறை உத்திகளையும் வழங்கியது.இந்நிலையில், 60 மாணவர்கள் கலந்து கொண்ட தேர்வு குறித்த கலந்துரையாடல்வின் 8வது பதிப்பின் இரண்டாவது அத்தியாயத்தில் இன்று, பிரபல நடிகையும் மனநல சாம்பியனுமான தீபிகா படுகோன் பங்கேற்றார்.மனநல சவால்களை எதிர்கொள்வது எவ்வாறு அதிகாரமளிக்கும் என்பதை தீபிகா பகிர்ந்து கொண்டார், மேலும் தனது சொந்த போராட்டங்களிலிருந்து தான் கற்றுக்கொண்ட மதிப்புமிக்க பாடங்களைப் பற்றி பேசினார். தனது மன அழுத்த மேலாண்மை உத்திகளைப் பகிர்ந்து கொண்ட அவர், போதுமான தூக்கத்தைப் பெறுதல், இயற்கையான சூரிய ஒளி மற்றும் சுத்தமான காற்றில் வெளியில் நேரத்தைச் செலவிடுதல் மற்றும் மன அழுத்தத்தை திறம்பட குறைக்க ஆரோக்கியமான தினசரி வழக்கத்தைப் பேணுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தன்னம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணம் ஆகியவை வெற்றிக்கு முக்கியம் என்று அவர் மேலும் கூறினார். தோல்விகளை, கற்கும் வாய்ப்புகளாகப் பார்க்க மாணவர்களை தீபிகா ஊக்குவித்தார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு