தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் சங்கத்தின் நிறுவனர், மூத்த பத்திரிகையாளர் தோழர் டி எஸ் ரவீந்திரதாசின் பதினோராவது நினைவு தினத்தை யொட்டி சனிக்கிழமை அன்று தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் சார்பில் சென்னை தலைமை அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில தலைவர் பி எஸ் டி புருஷோத்தமன், ரவீந்திரதாஸ் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். இதில் சங்கத்தின் துணைத் தலைவர் பி.சண்முகவேல், பொதுச்செயலாளர் சேம்பியன் முத்து, துணைச்செயலாளர் பி.ஆர்.வேலாங்கன், சென்னை மாவட்ட தலைவர் .சே.ப.தேவேந்திரன், செயலாளர் ம.மீ. ஜாபர், மூத்த பத்திரிகையாளர்கள்அப்சர்பாஷா, கோபாலரத்தினம், தி.ராஜேந்திரகுமார், பி.பூர்ணசந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
